ஷவர்மா கடையின் எரிவாயு உருளை வெடித்ததே மீரா அஜ்யாத் ஹோட்டல் தீ விபத்துக்குக் காரணம்

14 மார்ச் 2026, 5:35 AM
ஷவர்மா கடையின் எரிவாயு உருளை வெடித்ததே மீரா அஜ்யாத் ஹோட்டல் தீ விபத்துக்குக் காரணம்

ஷா ஆலாம், மார்ச் 13: மக்காவில் உள்ள மீரா அஜ்யாத் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு ஷவர்மா கடை ஒன்றில் எரிவாயு உருளை வெடித்ததே காரணம் என நம்பப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக ஹோட்டலில் தங்கியிருந்த 600க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

மீரா அஜ்யாத் ஹோட்டலின் தென்கிழக்கு ஆசிய விற்பனை மேலாளர், அசிசான் அரிஃப் அரிஃபின் கூறுகையில், உணவகத்தின் பின்புறம் உள்ள சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட எரிவாயு உருளைக் கசிவைத் தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்த-
தாகவும், பின்னர் தீ ஹோட்டலின் வெளிப்புறப் பகுதிக்குப் பரவியதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உணவக ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல், அருகிலுள்ள ஹோட்டலின் வெளிப்புறச் சுவர் தகடுகளில் தீ பரவியது.

"ஷவர்மா கடையின் பின்புறம் எரிவாயு உருளைகளை சேமித்து வைக்கும் கிடங்கு உள்ளது. அங்கிருந்த உருளையில் கசிவு ஏற்பட்டு வெடித்ததால் தீ பெரியதாகி கட்டுப்பாட்டை மீறியது. பின்னர் தீ மீரா அஜ்யாத் ஹோட்டலின் வெளிப்புறச் சுவர் தகடுகளில் பரவியது, அதனால்தான் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் தீ கொழுந்துவிட்டு எரிவதை காண முடிந்தது," என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இருப்பினும், தீ ஹோட்டலின் உட்புறப் பகுதிகளுக்குப் பரவவில்லை என்றும், வெளிப்புறச் சுவர் தகடுகளில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் விளக்கினார். "புகை மட்டுமே ஹோட்டலின் உட்புறம் நுழைந்தது, ஆனால் அறைகளோ மற்ற உட்புறப் பகுதிகளோ தீயில் சேதமடையவில்லை," என்றார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், உயரமான பகுதிகளை அடையக்கூடிய சிறப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை வெற்றிகரமாக அணைத்தனர்.

சம்பவத்தின் போது அறைகளில் இருந்த யாத்ரீகர்கள் உட்பட ஹோட்டலில் தங்கியிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்
பட்டனர். "பாதுகாப்புப் பரிசோதனைகள் முடியும் வரை, ஹோட்டல் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாற்று ஹோட்டல்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்," என்று அவர் கூறினார்.

மேலும், பாதுகாப்பு மதிப்பீட்டுப் பணிகளுக்காக ஹோட்டலை மூன்று நாட்களுக்கு மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக அசிசான் அரிஃப் தெரிவித்தார். "தீயணைப்பு மற்றும் தற்காப்புப் படையினர் மூன்று நாட்கள் ஹோட்டலை காலி செய்ய உத்தரவிட்டுள்ளனர். அதே நேரத்தில், ஹோட்டல் நிர்வாகம் மின் இணைப்புகள் உட்பட அனைத்து அமைப்புக-ளையும் சரிபார்த்து வருகிறது," என்றார்.

அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன், ஒவ்வொரு தளமாக மின்சாரம் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு, ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் மீண்டும் தங்கள் அறைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்
படுவார்கள்.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட
வில்லை, ஆனால் உணவகத்தின் பின்புற கிடங்கு முற்றிலும் எரிந்து நாசமானது.

முன்னதாக, விஸ்மா புத்ரா (மலேசிய வெளியுறவு அமைச்சு) அங்கு தங்கியிருந்த சுமார் 70 மலேசிய யாத்ரீகர்கள் பாதுகாப்-பாகவும், அடையாளம் காணப்பட்டதாகவும் உறுதிப்படுத்தியது.

சம்பந்தப்பட்ட யாத்ரீகர்கள் அனைவரும் TH டிராவல், ஜஹாஃபிஸ் டிராவல் மற்றும் ராய்ஹார் டிராவல் ஆகிய பயண நிறுவனங்களின் கீழ் வந்தவர்கள் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

மஸ்ஜிதில் ஹராமிற்கு அருகாமையில் அமைந்துள்ளதால், இந்த ஹோட்டல் மலேசியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உம்ரா மற்றும் ஹஜ் யாத்ரீகர்களிடையே பிரபலமான ஒன்றாகும்.

#KebakaranMakkah #HotelMiraAjyad #MakkahFire #JemaahSelamat #WismaPutra #GasExplosion

original news :
https://mediaselangor.com/ms/2026/03/347753

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.