ஷா ஆலாம், செப்.15 — இன்று மாலை 4 மணியளவில் சிலாங்கூரில் ஆறு பகுதிகளில் காற்று மாசு குறியீடு (API) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
அவற்றில், ஜோஹான் செத்தியாவில் API அளவு 188 ஆகப் பதிவாகி, நாட்டில் அதிகபட்ச காற்று மாசு குறியீட்டைக் கொண்ட பகுதியாக மாறியுள்ளது.
ஷா ஆலாமில் 173 ஆகவும், கிள்ளானில் 167 ஆகவும், பெட்டாலிங் ஜெயாவில் 166 ஆகவும், பந்திங்கில் 164 ஆகவும், கோலா சிலாங்கூரில் 163 ஆகவும் API பதிவாகியுள்ளன.
இதனிடையே, மலேசியா முழுவதும் 30 பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளதுடன், 29 பகுதிகளில் மிதமான அளவிலான காற்றுத் தரம் உள்ளது.







