ஷா ஆலாம், செப்.13 — சிலாங்கூரின் மூன்று மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனிடையே, கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களிலும் சில பகுதிகள் இதேபோன்ற மோசமான வானிலையை எதிர்கொள்ளும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, தேவையற்ற வெளிப்புறப் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.






