ஷா ஆலாம், ஆகஸ்ட் 11 — இன்று நண்பகல் வரை, சிலாங்கூர் மாநிலத்தில் சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர், கோலா லங்காட், செப்பாங் மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போர்ட் டிக்சன் மற்றும் சிரம்பான் பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை நிலவக்கூடும் எனத் மலேசிய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் சமீபத்திய அதிகாரப்பூர்வ வானிலை தகவல்களுக்கு மெட்மலேசியாவின் இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களையும், myCuaca செயலியையும் தொடர்ந்து பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.






