ஷா ஆலம், செப். 3: சபா, கெனிங்காவுக்கு மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 9.31 மணியளவில் 3.4 ரிக்டர் அளவிலான மித்மான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கெனிங்காவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டதாக மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது பாதிப்புகள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்துக்குப் பின்னர் நிலைமையை மலேசிய வானிலை ஆய்வுத் துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவ்வப்போது நிலவரம் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.







