ஹொங்கோங், செப்.2 : பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதியில் செவ்வாய்க்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்தது.
இந்த நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை 13:22 GMT மணியளவில் பதிவாகியது.
பூமிக்கு அடியில் சுமார் 122.4 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாக ஆரம்பக்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது சேதங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.






