வனத்துறை நிலத்தில் கோழிப்பண்ணைகள்; நடவடிக்கைக்கு இரண்டரை ஆண்டுகள் அவகாசம்

31 ஆகஸ்ட் 2026, 9:08 AM
வனத்துறை நிலத்தில் கோழிப்பண்ணைகள்; நடவடிக்கைக்கு இரண்டரை ஆண்டுகள் அவகாசம்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 31: கோலா லங்காட்டில் வனத்துறை நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வரும் தொழில்முனைவோருக்கு, தங்களது நடவடிக்கைகளை முறைப்படுத்த இரண்டரை ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது.

இந்தக் காலக்கட்டத்திற்குள் பண்ணை நடவடிக்கைகளை முறைப்படுத்துதல், தேவையான உரிமங்களுக்கு விண்ணப்பித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட செயல்முறைகளை அவர்கள் நிறைவு செய்ய வேண்டும்.

பந்திங் சட்டமன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தலைமையில் இதன் தொடர்பாகக் கூட்டங்கள் நடைபெற்றன.

கோலா லங்காட் பகுதியில் கோழிப்பண்ணை நடத்துவோர் மற்றும் காய்கறித் தோட்டங்களை நிர்வகிப்போர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த முடிவு எடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னரும் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறினால் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் பாப்பாராய்டு எச்சரித்தார்.

அதேவேளை, வனத்துறை நிலத்தில் காய்கறிகளைப் பயிரிட்டவர்கள் அவற்றை அறுவடை செய்து வெளியேற்றுவதற்காக 2026 டிசம்பர் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், சட்ட விதிமுறைகள் மற்றும் அரசு நிறுவனங்களின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறினார்.

இந்நிலையில், வியாபாரத்தை சட்டப்பூர்வமாகத் தொடர விரும்பும் பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மாற்று இடமாக, சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (PKPS) சொந்தமான அல்லது அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள விவசாய நிலங்களை அடையாளம் காணலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.