கூச்சிங், ஆகஸ்ட் 31: சரவாக்கில் புகைமூட்டம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இன்று காலை 9 மணி நிலவரப்படி மாநிலத்தின் நான்கு பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (IPU) ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.
நேற்று மூன்று பகுதிகள் மட்டுமே ஆபத்தான நிலையில் பதிவாகியிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
ஸ்ரீ அமான் இன்று ஆபத்தான நிலையில் IPU பதிவான புதிய பகுதியாகும்.
செரியானில் IPU 475 ஆக பதிவாகியுள்ளது. சமரஹான் பகுதியில் 334, ஸ்ரீ அமான் பகுதியில் 330, கூச்சிங்கில் 324 என்ற அளவில் IPU உள்ளது.
சரவாக்கில் மிகவும் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவாகியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகியுள்ளது.







