கூலாய், ஆகஸ்ட் 28: இந்த ஆண்டு ஐந்து மாநிலங்கள் மற்றும் புத்ராஜெயாவில் மொத்தம் 11 புதிய பள்ளிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அவற்றில் எட்டு பள்ளிகள் ஏற்கனவே செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், ஜோகூரில் மேலும் மூன்று பள்ளிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வோங் கூறினார்.
மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் பகுதிகளில் கல்வி வசதிகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதுடன் மாணவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான கற்றல் சூழலை வழங்குவதற்கும் இப்புதிய பள்ளிகளின் கட்டுமானம் உதவும் என அவர் தெரிவித்தார்.







