மலாக்கா, ஆகஸ்ட் 24 - மலேசியா - தாய்லாந்து எல்லைப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அந்நாட்டின் மூன்று மாவட்டங்களில் உள்ளூர் அரசாங்க அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் தீ வைப்பு சம்பவங்களை அடுத்து, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு மலேசியர்கள் அதிகம் பயணிப்பதை அடுத்து , மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ மொஹம்மட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
தற்போதைக்கு பதற்றச் சூழல் நிலவும் அப்பகுதிகளை மலேசியர்கள் தவிர்ப்பதே சிறந்தது என அவர் குறிப்பிட்டார்.
மலாக்கா, ஆயெர் கெரோ, ஸ்ரீ நெகிரியில் மாநில யாங் டிபெர்துவா-வின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விருதளிப்பு சடங்கில் கலந்துக் கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
முன்னதாக , அச்சடங்கில் டான் ஸ்ரீ மொஹம்மட் காலிட் இஸ்மாயிலுக்கு, டத்தோ ஸ்ரீ பட்டத்தைக் கொண்டு வரும் 'கெமிலாங் ஸ்ரீ மலாக்கா' ( Gemilang Seri Melaka) விருது வழங்கப்பட்டது.







