ஷா ஆலாம், ஆகஸ்ட் 7 — மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் சிலாங்கூர் இலவச டியூசன் திட்டம் (Program Tuisyen Rakyat Selangor - PTRS), 2030ஆம் ஆண்டுக்குள் 200,000 மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது என மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
அனைத்து தரப்பு மாணவர்களும் தங்களது கல்வி அடைவுகளை மேம்படுத்துவதற்கான சமமான வாய்ப்பை பெறுவதை உறுதி செய்வதே PTRS திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், இந்த PTRS திட்டம் சிலாங்கூர் மாணவர்களின் SPM தேர்வு செயல்திறனை மேம்படுத்த உதவியுள்ளது எனது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல், மாநில சராசரி தர குறியீடு (GPN) ஆண்டுதோறும் சிறப்பாக முன்னேறி வருவது, PTRS திட்டத்தின் நேர்மறையான தாக்கத்தை காட்டுகிறது.







