கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 — இன்று மாலை 6 மணி வரை நாட்டின் 10 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூர், பெர்லிஸ், கெடா, பேராக், கிளந்தான், பகாங், திரங்கானு, ஜோகூர், சரவாக், சபா ஆகிய மாநிலங்களில் மோசமான வானிலை நிலவக்கூடும்.
மேலும், இந்த அவசரகால எச்சரிக்கை அமலில் இருக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.






