நெகிரி செம்பிலானில் நாளை சிறப்புப் பொது விடுமுறை; மந்திரி பெசார் அறிவிப்பு

2 ஆகஸ்ட் 2026, 6:23 AM
நெகிரி செம்பிலானில் நாளை சிறப்புப் பொது விடுமுறை; மந்திரி பெசார் அறிவிப்பு

சிரம்பான், ஆகஸ்ட் 2 — நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நாளை (திங்கட்கிழமை) சிறப்புப் பொது விடுமுறை வழங்கப்படுவதாகப் புதிதாகப் பதவியேற்றுள்ள மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

செரி மெனாந்தி ரிசார்ட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

நேற்று நடைபெற்ற 16-வது நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் (PRN), வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து வாக்களித்துத் தங்கள் கடமையாற்றியதைச் சிறப்பிக்கும் விதமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், அனைத்து சவால்களையும் தாண்டி இரவு பகலாகத் தீவிரமாகவும் கடுமையாகவும் உழைத்த அனைத்துத் தரப்பினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையிலும் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுத் தங்கள் கடமையாற்றிய அனைவருக்கும் மந்திரி பெசார் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.