'வினோத் கும்பல்' உறுப்பினர்கள் 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: சட்டப் பிரிவு 130V(1)-ன் கீழ் வழக்குப்பதிவு

24 ஜூலை 2026, 9:27 AM
'வினோத் கும்பல்' உறுப்பினர்கள் 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: சட்டப் பிரிவு 130V(1)-ன் கீழ் வழக்குப்பதிவு

சிப்பாங், ஜூலை 24 — பல்வேறு வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 'வினோத் கும்பல்' உறுப்பினர்கள் 11 பேர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

நீதிபதி ஹுஸ்னா சுல்கிஃப்லி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அவர்களிடம் எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கைதான 11 பேரும் ஏப்ரல் 2024 முதல் ஜூன் 27, 2026 வரையிலான காலக்கட்டத்தில் தெலுக் பாங்லிமா காராங்கிலுள்ள பண்டார் ரிம்பாயுவில் இந்தக் கும்பலின் உறுப்பினர்களாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு தண்டனைச் சட்டப் பிரிவு 130V(1)-ன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராகக் கருதப்படும் முகமட் வினோத் சக்திவேல் (30), எம். புவனேஸ்வரன் (34), லாரன்ஸ் ஆல்ஃபிரட் (34), ஜி. சங்கீதன் (31), எம். நவீந்திரன் (29), எஸ். ஸ்ரீ தரன் (27), எம். சுரேந்தர் (27), என்.ஏ.என். விக்னேஸ்வரன் (27), ஜே.எம். கிஷான் (24), ஆர். ஷெர்வின்குமார் (23) மற்றும் டி. சார்வின் (21) ஆகியோரே குற்றம் சாட்டப்பட்ட 11 நபர்களாவர்.

இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக நீதிமன்றம் செப்டம்பர் 14-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.

2023-ஆம் ஆண்டு முதல் தீவிரமாக இயங்கி வந்த இந்த கும்பல், கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி வீடுகளை இலக்காகக் கொண்டு கொள்ளைகளில் ஈடுபட்டு வந்ததாக நேற்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்திருந்தார்.

இவர்களின் கைதைத் தொடர்ந்து சிலாங்கூரில் 21 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டு, இயங்கி வந்த ஆயுதமேந்திய கொள்ளைக் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதே கும்பலைச் சேர்ந்த தலைமறைவாக உள்ள எஞ்சிய 5 நபர்களைப் பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையைக் காவல்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.