கோலாலம்பூர், ஜூலை 18: சுலாவேசி கடற்பகுதியில் (Laut Sulawesi) இன்று காலை 10.23 மணியளவில் 5.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 4.5 பாகை வடக்கு அட்சரேகையிலும், 124.9 பாகை கிழக்கு தீர்க்கரேகையிலும், சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் பதிவாகியுள்ளதாக மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி இந்தோனேசியாவின் தாலவுட் தீவிலிருந்து (Pulau Talaud) மேற்கே சுமார் 199 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த இயற்கை சீற்றம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு எந்தவொரு சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என மலேசிய வானிலை ஆய்வு மையம் உறுதியளித்துள்ளது.







