டிஜிட்டல் யுக மாணவர்களின் சவால்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களின் அணுகுமுறைகளை மாற்ற வேண்டும் - உளவியல் நிபுணர்

15 ஜூலை 2026, 4:29 AM
டிஜிட்டல் யுக மாணவர்களின் சவால்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களின் அணுகுமுறைகளை மாற்ற வேண்டும் - உளவியல் நிபுணர்

ஷா ஆலாம், ஜூலை 15: டிஜிட்டல் யுகத்தில் இன்றைய மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஏற்ப, ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் மற்றும் அணுகுமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தின் (UPSI) உளவியல் மற்றும் ஆலோசனை நிபுணருமான பேராசிரியர் டாக்டர் முகமட் ஐஸ் ஷா முகமட் ஆரிப் தெரிவித்துள்ளார்.

தற்போதைய காலகட்டத்தில் மாணவர்களுடனான உணர்வுபூர்வமான பிணைப்பிற்கும் புரிதலுக்கும் ஆசிரியர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பல தசாப்தங்களுக்கு முன்பு பயனுள்ளதாக இருந்த அணுகுமுறைகள், இன்றைய நவீன சவால்களும் சூழலும் முற்றிலும் மாறுபட்டிருப்பதால் இப்போது முழுமையாகப் பொருந்தாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முந்தைய தலைமுறையில் ஸ்மார்ட்போன்களோ அல்லது சமூக ஊடகங்களோ இல்லை என்றும், இன்றைய மாணவர்கள் தொழில்நுட்பத்துடனேயே வளர்வதால், கல்வியாளர்களின் அணுகுமுறைகளும் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும்.

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நல்லுறவு, பிள்ளைகள் தங்களின் மன அழுத்தங்கள் குறித்து வெளிப்படையாகப் பேச உதவுவதோடு, அவர்களின் உளவியல் சிக்கல்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து தீர்க்க வழிவகுக்கும்.

ஆசிரியர்கள் வெறும் கல்வியை மட்டும் போதிக்காமல், மாணவர்களின் உணர்வுகளையும் அடையாளங்களையும் நல்வழிப்படுத்தும் வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும் என்று கூறிய அவர், தவறிழைக்கும் மாணவர்களைத் தண்டிப்பதையோ அல்லது அவர்களைக் குறைத்து மதிப்பிட்டு முத்திரை குத்துவதையோ ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.

ஒவ்வொரு மாணவனின் குறும்புத்தனம் அல்லது படிப்பில் பின்தங்கியிருப்பதற்குப் பின்னாலும் ஏதேனும் ஒரு வலுவான காரணம் இருக்கும் என்பதால், ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவர்களை அவசரமாகக் குற்றம் சாட்டக் கூடாது.

எனவே, அனைத்து ஆசிரியர்களுக்கும் உளவியல் பயிற்சி, உணர்ச்சி மேலாண்மை மற்றும் தனிநபர் தொடர்புத் திறன்கள் போன்ற பயிற்சிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

மாணவர்களின் மனநலம் என்பது உளவியல் நிபுணர்களின் பொறுப்பு மட்டுமல்ல, அது ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.