பந்திங் பள்ளியில் கத்திக் குத்து: மாணவி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு; மனநலப் பரிசோதனைக்கு உத்தரவு!

10 ஜூலை 2026, 4:22 AM
பந்திங் பள்ளியில் கத்திக் குத்து: மாணவி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு; மனநலப் பரிசோதனைக்கு  உத்தரவு!

பந்திங், ஜூலை 10 – பந்திங்கில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பதின்ம வயதுப் பெண் ஒருவர், தெலுக் டத்தோ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக இன்று கொண்டு வரப்பட்டார்.

மஜிஸ்திரேட் மஸ்லிந்தா செலாமட் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டதாகக் கூறி அந்தப் பெண் தலையசைத்ததைத் தொடர்ந்து, அவரிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட அப்பெண் ஒரு மாற்றுத்திறனாளி (OKU) என்பதைக் கருத்தில் கொண்டு, ஒரு மாதக் கால மனநல மதிப்பீட்டுப் பரிசோதனைக்காக உலு கிந்தாவில் உள்ள பஹாகியா மருத்துவமனைக்கு (Hospital Bahagia Ulu Kinta) அவரை அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தண்டனைச் சட்டப் பிரிவு 307-இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படச் சட்டத்தில் இடமுண்டு.

இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பான அடுத்தகட்ட அறிக்கை சமர்ப்பிப்பிற்காக வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதியை நீதிமன்றம் மறுதேதியாகக் குறித்துள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.