கோலாலம்பூர், ஜூலை 6 - நாட்டின் எட்டு மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூரில் இன்று இரவு 9 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரித்துள்ளது.
தீபகற்ப மலேசியாவில் பேராக், கிளாந்தான், பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களின் பல முக்கிய மாவட்டங்களும், கிழக்கு மலேசியாவில் சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் பல்வேறு உட்பகுதிகளும் இந்தத் திடீர் வானிலை மாற்றத்தால் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய கனமழை பெய்யும் போது பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் திடீர் வெள்ள அபாயம் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






