ஜோகூர் பாரு, ஜூன் 27- ஜோகூர் மாநிலத்தின் 16-வது மாநிலத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவுற்றது.
மாநில அளவில் இன்று காலை மணி 9-க்கு திறக்கப்பட்ட வேட்பு மனு தாக்கல் மையங்கள் அனைத்தும் காலை மணி 10-க்கு மூடப்பட்டன.
அதையடுத்து, ஒவ்வொரு தொகுதியிலும் யார், எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்ற அதிகாரப்பூர்வ விபர அறிவிப்பின் மீது தற்போது கவனம் திரும்பியுள்ளது.
வேட்பு மனுத் தாக்கல் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், 14 நாள் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் ஜூலை 10-ஆம் தேதி இரவு மணி 11.59 வரை சூடு பிடிக்கவுள்ளன.
ஜோகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் வேளை, 27 லட்சத்து 27 ஆயிரத்து 926 வாக்காளர்கள் அத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.







