சுபாங் ஜெயாவில் 150 முதியவர்களுக்கு இலவச இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி வழங்கப்பட்டது

16 ஜூன் 2026, 1:00 AM
சுபாங் ஜெயாவில் 150 முதியவர்களுக்கு இலவச இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி வழங்கப்பட்டது

ஷா ஆலம், ஜூன் 16 – சுபாங் ஜெயா சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டில் அண்மையில் நடத்தப்பட்ட சமூக நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் திட்டத்தின் வழி, மொத்தம் 150 முதியவர்கள் இன்ஃப்ளூயன்சா (Influenza) தடுப்பூசியை இலவசமாகப் பெற்றுக் கொண்டனர்.

இந்த ஆரோக்கிய மேம்பாட்டுத் திட்டம் குறித்துப் பேசிய சுபாங் ஜெயா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷெல் ஙா மெய் ஸி, முதியவர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என்றார்.

அதுமட்டுமின்றி, கடுமையான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைக் கொண்ட இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்றிலிருந்து முதியவர்களுக்கு முன்கூட்டியே பாதுகாப்பை வழங்குவதற்கும் இத்திட்டம் வழிவகுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இன்ஃப்ளூயன்சா தொற்றின் காரணமாக மிக எளிதாகப் பாதிக்கப்படக்கூடிய மற்றும் கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடிய உயர் ஆபத்துக் குழுவினராக முதியவர்கள் விளங்குவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனால்தான், அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் இத்தகைய தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வது போன்ற முன்கூட்டியத் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் அவசியமான ஒன்றாகும் என்று மிஷெல் ஙா மெய் ஸி விளக்கமளித்தார்.

பொதுமக்களிடையே, குறிப்பாக மூத்த குடிமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தகைய ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வுத் திட்டங்களைத் தங்களின் சேவை மையம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.