பண்டமாரான் தொகுதியில் 30 தனித்து வாழும் தாய்மார்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன

9 ஜூன் 2026, 8:00 AM
பண்டமாரான் தொகுதியில் 30 தனித்து வாழும் தாய்மார்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன

ஷா ஆலம், ஜூன் 9: பண்டமாரான் சட்டமன்றத் தொகுதியின் மகளிர் மேம்பாட்டு மையத்தின் (PWB) ஏற்பாட்டில், அப்பகுதியில் உள்ள 30 தனித்து வாழும் தாய்மார்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது அன்றாட வாழ்க்கையை நகர்த்த சிரமப்படும் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டமாகும் என்று பண்டமாரான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லியோங் தக் சீ தெரிவித்துள்ளார்.

தற்போது நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினங்களின் சுமையைக் குறைப்பதற்கும், குறிப்பாக அன்றாடப் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்கத் தவிக்கும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு ஆதரவை வழங்குவதற்கும் இந்த உதவி பெரிதும் துணைபுரியும் என்று அவர் கூறினார்.

பெண்களின் நலன், குறிப்பாக நலிவடைந்த நிலையில் உள்ள தனித்து வாழும் தாய்மார்களின் நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் தங்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத கடப்பாட்டை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது என அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த உதவி மட்டுமின்றி, பண்டமாரான் சட்டமன்றத் தொகுதியின் மகளிர் மேம்பாட்டு மையம் இனிவரும் காலங்களிலும் பெண்களின் நலனுக்காகவும் அவர்களின் மேம்பாட்டிற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும் என்று லியோங் தக் சீ உறுதியளித்தார்.

இத்தகைய தொடர்ச்சியான முயற்சிகளின் மூலமே, பெண்கள் மற்றும் தனித்து வாழும் தாய்மார்கள் சமுதாயத்தில் உரிய உதவிகளையும் கவனத்தையும் பெறுவதை உறுதி செய்ய முடியும்; அவர்கள் எந்தச் சூழலிலும் தனித்துவிடப்பட மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதே வேளையில், இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்திய அனைத்துத் தரப்பினருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர், இது போன்ற இன்னும் பல திட்டங்கள் தொடர வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

மேலும், இந்த நிகழ்ச்சியை மிகச் சிறந்த முறையில் ஒருங்கிணைத்து வழிநடத்திய பண்டமாரான் தொகுதி மகளிர் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மிமி எங் சுய் மீயின் அர்ப்பணிப்புமிக்கச் சேவைக்கு அவர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் சமர்ப்பித்தார்.

இந்த உதவி தாய்மார்களின் சுமையைக் குறைத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்குப் பயனுள்ளதாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.