ஷா ஆலம், ஜூன் 5: சுபாங் ஜெயா, SS15-இல் வாழ்க்கைத்தரம் மற்றும் நகர்ப்புறச் சூழலை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், அப்பகுதியின் சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளை மதிப்பிடும் 'பிளேஸ்மேக்கிங்' (Placemaking) ஆய்வின் அமலாக்கத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உள்ளூர் சமூகத்தின் தேவைகளுக்கு மிகவும் ஏற்புடைய வகையிலான மேம்பாட்டுத் திட்டங்களை வகுக்க, குடியிருப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களைப் பெறுவதே இந்த ஆய்வின் பிரதான நோக்கம் என சுபாங் ஜெயா மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஜே) தெரிவித்துள்ளது.
எம்.பி.எஸ்.ஜே-இன் கூற்றுப்படி, சிறந்த நகர்ப்புறச் சூழலை உருவாக்குவதற்காகப், போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்துதல், பொதுப் போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பொது இடங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களில் இந்த மதிப்பீடு கவனம் செலுத்துகிறது.
"போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்துதல், பொதுப் போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பொது இடங்களைச் செயல்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், குறிப்பிட்ட அம்சங்களின் அடிப்படையில் இப்பகுதியின் மேம்பாட்டுச் சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் மதிப்பீடு செய்வார்கள்.
"இந்த ஆய்வு மிகவும் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நகர்ப்புற மேம்பாட்டிற்கான ஒரு சிறந்த அடிப்படையாக அமையும் என நம்பப்படுகிறது," என எம்.பி.எஸ்.ஜே தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கான கலந்தாலோசனை அமர்வு, எம்.பி.எஸ்.ஜே மற்றும் 'திங்க் சிட்டி' (Think City) அமைப்பின் ஏற்பாட்டில், குடியிருப்பாளர்கள் மற்றும் தரப்பினரின் ஒத்துழைப்போடு நேற்று சுபாங் ஜெயா, SS15 எம்.பி.எஸ்.ஜே பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிச்செல் எங் மெய் ஸீயும் கலந்து கொண்டார்.
சுபாங் ஜெயாவில் நிலையான நகர திட்டமிடலை வலுப்படுத்தும் SS15 பிளேஸ்மேக்கிங் ஆய்வு
5 ஜூன் 2026, 5:57 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சுபாங் ஜெயாவில் வெளிநாட்டினரால் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட இரு வணிகங்களுக்கு எதிராக நடவடிக்கை
Shalini Rajamogun
12 ஜூன் 2026

selangor
சுபாங் ஜெயாவில் 150 முதியவர்களுக்கு இலவச இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி வழங்கப்பட்டது
Shalini Rajamogun
16 ஜூன் 2026

national
சுபாங் ஜெயாவில் 1,474 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு
Shalini Rajamogun, Evelyn Moses
27 மே 2026

selangor
மரங்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க பராமரிப்புக்கு 5.2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு - எம்பிஎஸ்ஜே
Shalini Rajamogun, Evelyn Moses
27 மே 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



