ஷா ஆலம், ஏப்ரல் 28: மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களைத் தொடர்ந்து, சேவை மற்றும் உற்பத்தித் துறைகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய முன்முயற்சிகளுடன் சிலாங்கூர் ஆற்றல் வலுவூட்டல் தொகுப்புத் திட்டத்தை மாநில அரசாங்கம் வலுப்படுத்தவுள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் வாழ்க்கைச் செலவினம், பணவீக்கம் மற்றும் நலிந்த குழுவினரைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். தற்போது, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக விளங்கும் இரண்டு முக்கிய துணைத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
"வாழ்க்கைச் செலவினம், பணவீக்கம் மற்றும் நலிந்த குழுவினரின் பிரச்சனைகளைத் தீர்க்க முதலில் நாங்கள் முயன்றோம். இந்த நெருக்கடியால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வால் மேலும் மோசமாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள் இதில் அடங்குவர்."
"அடுத்ததாக, சிலாங்கூரில் மிக முக்கியமான இரண்டு துணைத் துறைகளான சேவை மற்றும் உற்பத்தியை நாம் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும். அடுத்த மாதம் அல்லது சிறிது காலத்திற்குப் பிறகு, இந்தத் தொழில்களைப் பாதுகாக்க சில புதிய முன்முயற்சிகளை நாங்கள் தொடங்குவோம். இது தொடர்பாக இன்வெஸ்ட் சிலாங்கூர் தரப்பு ஏற்கனவே கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது," என்று அவர் கூறினார்.
இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவு செய்யும் போது அவர் இவ்வாறு கூறினார்.
மக்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகளும் வருமானமும் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய, பொருளாதாரத்தைத் தூண்டும் இந்தத் தொழில்களின் தொடர்ச்சி மிகவும் முக்கியம் என்று அமிருடின் குறிப்பிட்டார்.
"இந்தத் தொழில்கள் தொடர்ந்து இயங்கும்போது, மக்களுக்கு வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைக்கும். இதைத்தான் நான் எப்போதும் கண்ணியமான பொருளாதாரம் என்று குறிப்பிடுகிறேன்."
"இல்லையென்றால், திருட்டு, கொள்ளை போன்ற கட்டுப்பாட்டை மீறிய செயல்கள் அதிகரிக்கக்கூடும்."
"அந்த மோசமான நிலைக்கு நாம் செல்லமாட்டோம் என்று நம்புகிறோம். அதனால்தான், தற்போது வெற்றிகரமாகச் செயல்படும் இந்தத் தொழில்களையும் துணைத் துறைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும்," என்றார்.
தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள தற்போதுள்ள முன்முயற்சிகளை மேலும் வலுப்படுத்தவும், அதன் அமலாக்கத்தை திறம்பட உறுதி செய்யவும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளையும் வரவேற்பதாக அமிருடின் மேலும் கூறினார்.
மேற்கு ஆசிய நெருக்கடி: சிலாங்கூர் முக்கியத் தொழில்களை வலுப்படுத்துகிறது
29 ஏப்ரல் 2026, 2:34 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
மேற்கு ஆசியப் பதற்றம்: மாநிலத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுடன் விளக்கக் கூட்டம் - பிரதமர்
Shalini Rajamogun
27 மார்ச் 2026

selangor
சிலாங்கூர் மாணவர்களுக்கு இலவசக் காலை உணவுத் திட்டம்; மனித மூலதன மேம்பாட்டிற்கான ஒரு முதலீடு
Shalini Rajamogun, Norrasyidah Arshad
22 ஜூன் 2026

selangor
மேற்கு ஆசிய மோதல்களுக்கு இடையிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun
22 ஜூன் 2026

selangor
அத்தியாவசிய உணவுப் பாதுகாப்பு: சிலாங்கூர் உணவு கிடங்கிற்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
19 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



