ஷா ஆலம், ஏப்ரல் 24: கிள்ளானில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவ வெளிநாட்டுப் பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி எஸ். விஜய ராவ், நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் ஒரு வீட்டில் வெளிநாட்டு ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறினார்.
சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 32 வயதான அப்பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இக்கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டப் பிரிவு 302-இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதலே இச்சம்பவத்திற்குக் காரணம் என நம்பப்படுகிறது. மேலதிக விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது பொது அமைதியைக் குலைக்கும் ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
சமூகத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் தரப்பினர் மீது தற்போதுள்ள சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது என்றும் அவர் எச்சரித்தார்.
கிள்ளானில் ஆடவர் சடலம் மீட்பு; விசாரணைக்கு உதவ வெளிநாட்டுப் பெண் கைது
24 ஏப்ரல் 2026, 3:52 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெட்டாலிங் ஜெயாவில் காப்பகத்திற்கு முன் கைவிடப்பட்ட குழந்தையின் சடலம்: இரு இளம் பெண்கள் கைது
Shalini Rajamogun
14 ஜூன் 2026

national
கூச்சிங்: போலி பங்கு முதலீட்டு திட்டத்தில் சிக்கிய முதியவர் RM9.08 மில்லியனை இழந்தார்
Shalini Rajamogun
15 ஜூன் 2026

national
பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் புறக்கணித்து தென் தாய்லாந்திற்குள் குவியும் மலேசியர்கள்
Shalini Rajamogun
14 ஜூன் 2026

national
அலோங் கடன் தொல்லையால் 24 மணி நேர மளிகைக் கடைகளில் தொடர் கொள்ளை: லோரி உதவியாளர் கைது
Shalini Rajamogun
13 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



