ஷா ஆலம், ஏப்ரல் 24: கிள்ளானில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவ வெளிநாட்டுப் பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி எஸ். விஜய ராவ், நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் ஒரு வீட்டில் வெளிநாட்டு ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறினார்.
சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 32 வயதான அப்பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இக்கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டப் பிரிவு 302-இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதலே இச்சம்பவத்திற்குக் காரணம் என நம்பப்படுகிறது. மேலதிக விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது பொது அமைதியைக் குலைக்கும் ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
சமூகத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் தரப்பினர் மீது தற்போதுள்ள சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது என்றும் அவர் எச்சரித்தார்.
கிள்ளானில் ஆடவர் சடலம் மீட்பு; விசாரணைக்கு உதவ வெளிநாட்டுப் பெண் கைது
24 ஏப்ரல் 2026, 3:52 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
கேபிள் திருட்டு: ஐந்து பேர் கொண்ட கும்பலைத் தீவிரமாகத் தேடும் காவல்துறை
Shalini Rajamogun
9 ஜூன் 2026

selangor
கோம்பாக்கில் குற்றச் செயல்கள் 24 சதவீதம் சரிவு; குற்றத் தடுப்பு வியூகங்கள் பலனளித்தன
Shalini Rajamogun
5 ஜூன் 2026

national
பத்தாங் காலி–கெந்திங் சாலை விபத்து: பகாங் மூத்த காவல்துறை அதிகாரி உயிரிழந்தார்
Shalini Rajamogun
3 ஜூன் 2026

national
கொலை மிரட்டல் புகார் தொடர்பில் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் - MACC முன்னாள் தலைமை ஆணையர்
Shalini Rajamogun
27 மே 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



