இஸ்தான்புல், ஏப்ரல் 15: கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் மீது அமெரிக்க கடற்படைகள் தடைகளைச் செயல்படுத்தியுள்ள போதிலும், அவ்வழியாக கப்பல்கள் தொடர்ந்து பயணித்து வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஈரானில் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு (1400 GMT) இத்தடை தொடங்கியதிலிருந்து, 14 கப்பல்கள் வளைகுடாவிற்குள் நுழைந்துள்ளன, ஏழு கப்பல்கள் இந்த காலகட்டத்தில் ஜலசந்தியை விட்டு வெளியேறியுள்ளன.
மொத்தத்தில், 21 கப்பல்கள் இந்த ஜலசந்தியைக் கடந்துள்ளன. அதே நேரத்தில் செவ்வாய்க்கிழமை 1300 GMT நிலவரப்படி 13 கப்பல்கள் இன்னும் அப்பகுதியில் இருப்பதாக அனடோலு ஏஜென்சியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சுமார் 2,000 கப்பல்கள் வளைகுடாவின் ஒரு பகுதியில் சிக்கியுள்ளன. மேலும் சுமார் 400 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வளைகுடாவிற்குள் நுழையக் காத்திருக்கின்றன.
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட கப்பல்களும் இந்த ஜலசந்தி வழியாகச் செல்வதை மரைன் டிராஃபிக் (MarineTraffic) தரவுகள் காட்டுகின்றன.
குவாதார் வளைகுடா மற்றும் ராஸ் அல் ஹட் இடையே அமெரிக்க கடற்படைகள் தடையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை தொடங்கியதிலிருந்து அங்கு கப்பல் போக்குவரத்து அதிகமாகவே உள்ளது.
சில கப்பல்கள் தங்களது அடையாளங்களை மறைக்க போலியான தானியங்கி அடையாள அமைப்பு (AIS) சிக்னல்களைப் பயன்படுத்துவதாக டேங்கர் டிராக்கர்ஸ்.காம் (TankerTrackers.com) குறிப்பிடுகிறது.
அமெரிக்கா தடை விதித்தும் ஹார்முஸ் ஜலசந்தியில் கடல்வழிப் போக்குவரத்து தொடர்கிறது
15 ஏப்ரல் 2026, 4:14 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
BUDI95 திட்டத்தின் கீழ் 200 லிட்டர் ஒதுக்கீடு தொடரும்
Shalini Rajamogun
23 ஜூன் 2026

national
அமெரிக்கா - ஈரான் அமைதி உடன்படிக்கை; பிரதமர் அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார்
Shalini Rajamogun
16 ஜூன் 2026

antarabangsa
ஈரான் உடனான முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது; அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி
Shalini Rajamogun
16 ஜூன் 2026

antarabangsa
ஈரான் உடன்படிக்கைக்கு வராவிட்டால் ராணுவத் தாக்குதல்; அமெரிக்க அதிபர் எச்சரிக்கை
Shalini Rajamogun
15 ஜூன் 2026

வகைantarabangsa
உங்கள் கருத்து என்ன?



