தீபகற்ப மலேசியாவில் 10 இடங்களில் வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது

10 ஏப்ரல் 2026, 1:38 AM
தீபகற்ப மலேசியாவில் 10 இடங்களில் வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது

கோலாலம்பூர், ஏப்ரல் 10: தீபகற்ப மலேசியாவில் உள்ள 10 பகுதிகளில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, நிலை 1 வெப்ப அலை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) வெளியிட்ட அறிக்கையின்படி, கிளந்தானில் உள்ள தானா மேரா, பாசிர் மாஸ் மற்றும் மாச்சாங் பகுதிகளும், பகாங்கில் உள்ள ஜெராண்டுட், தெமர்லோ மற்றும் மாரான் பகுதிகளும் இதில் அடங்கும்.

மேலும், பேராக் மாநிலத்தில் உள்ள கிந்தா, சிலாங்கூரில் உள்ள கோம்பாக், நெகிரி செம்பிலானில் உள்ள ஜெம்போல் மற்றும் ஜோகூரில் உள்ள சிகாமாட் ஆகிய பகுதிகளிலும் வெப்பமான வானிலை நிலவுகிறது.

ஒரு பகுதியின் தினசரி அதிகபட்ச வெப்பநிலை, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் போது நிலை 1 அல்லது எச்சரிக்கை நிலை வெப்ப அலை அறிவிக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வெப்பமான வானிலை குறித்த சமீபத்திய தகவல்களைப் பொதுமக்கள்
https://www.met.gov.my/iklim/status-cuaca-panas/ என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.