புத்ராஜெயா, ஏப்ரல் 8 : அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்த உடன்படிக்கையை மலேசியா வரவேற்கிறது.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் பதட்டங்களைக் குறைத்து, மிகவும் தேவையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய படியாக இந்த வளர்ச்சி அமைந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
"மீண்டும் விரோதப் போக்குகள் ஏற்படுவதைத் தவிர்க்க, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தத்தின் அனைத்து நிபந்தனைகளையும் முழுமையாக மதித்து, நேர்மையுடன் செயல்படுத்த வேண்டும் என்று மலேசியா வலியுறுத்துகிறது," என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
பிராந்தியத்தின் பலவீனமான ஸ்திரத்தன்மைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு ஆத்திரமூட்டும் செயல்களையோ அல்லது தன்னிச்சையான நடவடிக்கைகளையோ தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
"இந்த உடன்படிக்கைக்கு வழிவகுத்த இராஜதந்திர மற்றும் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் மலேசியா தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது."
"நீண்டகால மோதல்களைத் தீர்ப்பதற்கும், பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இராஜதந்திரமே ஒரே சாத்தியமான வழி என்பதை இந்த வெற்றி காட்டுகிறது," என்று அமைச்சு குறிப்பிட்டது.
தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளுக்கு உறுதியான, விரிவான மற்றும் அமைதியான தீர்வைக் காண, இந்த வாய்ப்பை அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
"இந்த அமைதி முயற்சிகளை ஆதரிக்குமாறும், பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்யும் நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்குப் பங்களிக்குமாறும் மலேசியா அனைத்துலக சமூகத்திற்கு அழைப்பு விடுக்கிறது," என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தைத் தொடர்ந்து, ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாயன்று அறிவித்தார்.
இதற்கிடையில், நாட்டின் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், தெஹ்ரான் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்தும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தத்திற்கு மலேசியா ஆதரவு; உடன்படிக்கையை மதிக்க வலியுறுத்தல்
8 ஏப்ரல் 2026, 9:17 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
அமெரிக்கா - ஈரான் அமைதி உடன்படிக்கை; பிரதமர் அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார்
Shalini Rajamogun
16 ஜூன் 2026

antarabangsa
ஈரான் உடனான முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது; அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி
Shalini Rajamogun
16 ஜூன் 2026

antarabangsa
மத்திய கிழக்கில் போர்: குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள 18 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
Shalini Rajamogun
11 ஜூன் 2026

antarabangsa
அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலால் ஈரானில் மக்கள் அவதி
Shalini Rajamogun
11 ஜூன் 2026

வகைantarabangsa
உங்கள் கருத்து என்ன?



