கிள்ளான், ஏப். 7 – கிள்ளானில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் 'மாட் ரெம்பிட்' நடவடிக்கை- களை ஒடுக்கும் முயற்சியாக 18 மோட்டார் சைக்கிள்களை காவல்துறை பறிமுதல் செய்தது.
அதிவேகமாகவும் பொறுப்பற்ற முறையிலும் வாகனம் ஓட்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது மற்றும் பிற சாலைப் பயனர்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயக-ரமான சாகசங்களில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகள் கண்டறியப் பட்டதாக கிள்ளான் தெற்கு மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD) தெரிவித்தது.
"இந்த நடவடிக்கைகள் பொதுவாக 12 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களை உள்ளடக்கியது, மேலும் இது அதிகாலை வேளையில் நடைபெறுகிறது."
"இந்தச் செயல்களை நாங்கள் தீவிரமாகக் கருதுகிறோம். எனவே, இந்த நடவடிக்கைகள் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தொடர்ச்சியான மற்றும் கவனம் செலுத்திய அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன," என்று அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
காவல்துறையின் உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம், சம்பந்தப்பட்ட குழுவினர் ஒன்று கூடுவதற்கும், போக்குவரத்தை தடுப்பதற்கும், சட்டவிரோதப் பந்தயங்களில் ஈடுபடுவதற்கும் கிள்ளானைச் சுற்றியுள்ள பல இடங்கள் மையமாக இருப்பது கண்டறியப் பட்டது.
"பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான மோட்டார் சைக்கிள்கள், குறிப்பாக எஞ்சின் மற்றும் எக்ஸாஸ்ட் பகுதிகளில், அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தி பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் மாற்றியமைக்கப் பட்டிருந்தது ஆய்வில் தெரிய வந்தது," என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும், இதில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள் உட்பட சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாத இளைஞர்கள் ஆவர்.
குற்றவாளிகளுக்கு சம்மன் வழங்கியதோடு, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட தங்கள் பிள்ளைகளை அனுமதித்த அல்லது உடந்தையாக இருந்த பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிடையில், இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அவ்வப்போது தேடுதல் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
"பொதுமக்கள் எப்போதும் சாலை விதிகளைப் பின்பற்றுமாறும், தமக்கும் பிற சாலைப் பயணிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்," என்று அது மேலும் கூறியது.
கிள்ளானில் 'மாட் ரெம்பிட்' தேடுதல் வேட்டை: 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
7 ஏப்ரல் 2026, 6:06 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
குற்றவியல் பதிவுகள் 31 கொண்ட ஆடவரைத் துரத்திச் சென்ற போலீசார் அனைத்துலக விமான நிலைய (கேஎல்ஐஏ) பகுதியில் கைது செய்தனர்
Pakiya
31 மார்ச் 2026

selangor
தங்க நகைக் கடை கொள்ளைச் சம்பவம் முடிவுக்கு வந்தது; பாதுகாவலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது
Pakiya
19 மார்ச் 2026

selangor
இரு போதைப்பொருள் கும்பல்கள் முறியடிப்பு; RM 14.6 மில்லியன் மதிப்புள்ள ஷாபு, கஞ்சா பறிமுதல்
Pakiya
11 மார்ச் 2026

selangor
பந்திங்கில் வழிப்பறி கொள்ளையில் ஒருவர், வாகனம், பணம், உடமைகளையும் இழந்தார்
Pakiya
11 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




