ஷா ஆலம், ஏப்ரல் 6: பயோஃப்லாக் தொழில்நுட்பம், மீன்வளர்ப்பு நடவடிக்கைகளின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதுடன், உள்ளூர் மீன் உற்பத்தியை விரைவுபடுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
சிலாங்கூர் மீன்வளத் துறை, தொட்டிகளில் மீன் வளர்க்கும் இந்த முறை, குறிப்பாக திலாப்பியா இனங்களுக்கு அதிக வரவேற்பைப் பெற்று வருவதாகத் தெரிவித்தது.
ரவாங்கில் உள்ள ஒரு மீன்வளர்ப்பு மையத்திற்குப் பொருளாதார அமைச்சுடன் இணைந்து சமீபத்தில் மேற்கொண்ட கண்காணிப்புப் பயணத்தைத் தொடர்ந்து, முகநூல் பதிவு மூலம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
"பயோஃப்லாக் போன்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நீர்ப் பயன்பாட்டைக் குறைக்கவும், செலவுகளைச் சேமிக்கவும், பண்ணை விளைச்சலை அதிகரிக்கவும் முடியும்," என்று அந்தத் துறை கூறியது.
இந்த தொழில்நுட்பம் மீன்களை சுமார் இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரையிலான குறுகிய காலத்தில் சந்தைப்படுத்த அனுமதிக்கிறது. அதே நேரத்தில், உற்பத்தியை அதிகரிக்கவும், மீன்வள ஆதாரங்கள் போதுமானதாக இருப்பதை உறுதி செய்யவும், அதிகமான பண்ணையாளர்கள் நவீன முறைகளுக்கு மாறுவதை அந்தத் துறை ஊக்குவிக்கிறது.
மீன் வளர்ப்பை வேகப்படுத்தி, செலவைக் குறைக்கும் பயோஃப்லாக் தொழில்நுட்பம்
6 ஏப்ரல் 2026, 6:59 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
புடு பசாரில் அலங்கார மீன் விற்பனை வளாகங்களில் தடைசெய்யப்பட்ட மீன்களும் விற்பனையில்- திடீர் சோதனையால் அதிரடி
Evelyn Moses
6 மார்ச் 2026

national
மீன்களைக் குறைந்த விலையில் வாங்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது
Shalini Rajamogun
8 பிப்ரவரி 2026

national
மீன்களின் விலையில் 30 சதவீதம் வரை அதிகரிப்பு
Shalini Rajamogun
18 டிசம்பர் 2025

national
இவ்வாண்டு 628 மீனவர்களுக்கு RM1.8 மில்லியன் ஒதுக்கீடு
Shalini Rajamogun
8 டிசம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?





