கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 15 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துள்ளன

6 ஏப்ரல் 2026, 2:44 AM
கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 15 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துள்ளன

இஸ்தான்புல், ஏப்ரல் 6: ஈரானிடமிருந்து அனுமதி பெற்றதைத் தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 15 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துள்ளதாக, ஈரானிய ஊடகங்களை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவும் (AS) இஸ்ரேலும் அந்நாட்டின் மீது தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை ஒப்பிடும்போது, இந்த ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை 90 விழுக்காடு குறைவாகவே உள்ளது என்று ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டாகத் தாக்குதல் நடத்தியதிலிருந்து, அப்பகுதி மிகுந்த எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில், ஈரானின் அப்போதைய உச்சகட்ட தலைவர் அயதுல்லா அலி காமெனி உட்பட 1,340க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள இஸ்ரேல், ஜோர்டான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வதையும் ஈரான் தடுத்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.