ஷா ஆலம், ஏப்ரல் 5: பண்டார் புக்கிட் ராஜாவில் இன்று அதிகாலை கார் ஸ்டீயரிங் பூட்டைக் கொண்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிள்ளான் உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் கூறுகையில், சந்தேக நபருக்கும் பாதிக்கப் பட்டவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, ஒரு குடியிருப்புப் பகுதியில் உள்ள பாதுகாப்புச் சாவடியில் அதிகாலை 1 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறினார்.
தாக்குதலில் காயமடைந்த 40 வயதுடைய உள்ளூர் ஆடவரான பாதிக்கப்பட்டவர், ஷா ஆலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அதிகாலை 4.18 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
"சந்தேக நபர் ஒரு மழுங்கிய பொருளைக் கொண்டு பாதிக்கப்பட்டவரைத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் செயல்பட்ட காவல்துறை, சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைது செய்ததுடன், சம்பவத்தில் பயன்படுத்தப் பட்டதாக நம்பப்படும் கார் ஸ்டீயரிங் பூட்டையும் பறிமுதல் செய்தது.
மேலதிக விசாரணையில், 40 வயதுடைய அந்த சந்தேக நபருக்கு எட்டு குற்றப் பதிவுகளும், போதைப்பொருள் தொடர்பான இரண்டு பதிவுகளும் இருப்பது தெரியவந்தது.
கொலைக் குற்றத்திற்காக, தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
https://mediaselangor.com/ms/2026/04/350675
கார் ஸ்டீயரிங் பூட்டால் பாதுகாவலரைக் கொன்ற ஆடவர் கைது
5 ஏப்ரல் 2026, 11:27 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
35 ஆண்டுகால சேவைக்குப் பின்னர் ஓய்வு பெற்றார் அயோப் கான்
Bernama
26 ஜூலை 2026

selangor
பகடிவதை சம்பவங்களைத் தடுக்க பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் - கிள்ளான் மாவட்டக் காவல்துறை
Shalini Rajamogun
15 ஜூலை 2026

national
கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையில் கூடுதல் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; சுற்றுலாத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
Shalini Rajamogun
10 ஜூன் 2026

national
புக்கிட் சாங்காட் ஆசாவில் மாயமான இளம் பெண் சடலமாக மீட்பு
Shalini Rajamogun
26 மே 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



