ஷா ஆலம்: ஏப் 4;காசாவிற்கான மலேசிய மனிதாபிமான உதவிப் பணி மற்றும் குளோபல் சுமுட் புளோட்டிலா 2.0 பிரதிநிதிகள் குழுவில், மீடியா சிலாங்கூர் தலைமைச் செயல்முறை அதிகாரி முகமது ஃபரீட் முகமது ஆஷாரி, சிலாங்கூர் மந்திரி புசாருடன் இணைந்து கொள்கிறார்.
மாண்புமிகு டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியை நாட்டின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக நியமிப்பது தொடர்பான சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த பங்கேற்பு அமைந்துள்ளது. இப்பணிக்குழு-வினர் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி புறப்படவிருக்-கின்றனர்.
இந்த மனிதாபிமானப் பணியில் முகமது ஃபரீடின் ஈடுபாடு, மனிதாபிமான ஒற்றுமை மற்றும் அனைத்துலக மட்டத்தில் அமைதி, சுதந்திரம் மற்றும் நீதியின் மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளுக்கு மீடியா சிலாங்கூர் தொடர்ந்து அளிக்கும் ஆதரவையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை குறிப்பிட்டது.
எனவே, இந்தப் பணி முழுவதும் பிரதிநிதிகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் வெற்றி உறுதி செய்யப்பட வேண்டும் என்று அனைத்து ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் மலேசிய மக்களிடமிருந்து பிரார்த்தனைகளையும் ஆதரவையும் மீடியா சிலாங்கூர் கோருகிறது.
மலேசிய இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனைக் குழு (MAPIM) ஏற்பாடு செய்துள்ள இந்த மனிதாபிமானப் பணி, காசாவில் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் பாலஸ்தீனிய மக்களுக்கு உதவுவதற்காக 374 டன் எடையுள்ள 30 கொள்கலன் உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் என்று மந்திரி புசார் அலுவலகம் நேற்று அறிவித்திருந்தது.
"மந்திரி புசார் இந்த மனிதாபிமானக் குழுவிற்குத் தலைமை தாங்குவார்; கெய்ரோவில் கொள்கலன்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்படுவதை உறுதி செய்வார்."
"காசாவின் முற்றுகைப் பிரச்சினைக்கு எதிராக மலேசியாவின் உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்க ரஃபா எல்லை வாயிலில் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்குவார். அதைத் தொடர்ந்து ஸ்பெயினின் பார்சிலோனா துறைமுகத்தில் இருந்து சுமுட் நுசாந்தரா பிரதிநிதிகள் புறப்படுவதைக் கண்காணிப்பார்" என்று அந்த அதிகாரப்பூர்வ அறிக்கை மேலும் தெரிவித்தது.
https://mediaselangor.com/ms/2026/04/350653
காசாவிற்கான மலேசிய மனிதாபிமான உதவிப் பணி மற்றும் குளோபல் சுமுட் புளோட்டிலா 2.0 பிரதிநிதி குழுவில், மீடியா சிலாங்கூர்ஃபரீட் முகமது ஆஷாரி
4 ஏப்ரல் 2026, 12:33 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
அத்தியாவசிய உணவுப் பாதுகாப்பு: சிலாங்கூர் உணவு கிடங்கிற்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
19 ஜூன் 2026

selangor
'மாமாகெர்ஜா' (MamaKerja) திட்டத்திற்கு கூடுதலாக 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
19 ஜூன் 2026

selangor
விவசாயிகள், மீனவர்களுக்குக் கூடுதலாக 6 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி; 2,469 பேர் பயன்
Evelyn Moses
19 ஜூன் 2026

selangor
வீடு வாடகைதாரர்களுக்கு 3 மாதத் தவணை விலக்கு- சிலாங்கூர் அரசு அறிவிப்பு
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
19 ஜூன் 2026

வகைantarabangsa
உங்கள் கருத்து என்ன?



