உடல், மன மற்றும் உணர்ச்சி நலனை கவனத்தில் கொண்டு சிலாங்கூர் புதிய பராமரிப்புத் தொகுதியை உருவாக்குகிறது

1 ஏப்ரல் 2026, 3:04 AM
உடல், மன மற்றும் உணர்ச்சி நலனை கவனத்தில் கொண்டு  சிலாங்கூர் புதிய பராமரிப்புத் தொகுதியை உருவாக்குகிறது

ஷா ஆலம், ஏப்ரல் 1: சமூகத்தின் நல்வாழ்வை வலுப்படுத்தும் நோக்கில், உடல், மன மற்றும் உணர்ச்சி அம்சங்களை உள்ளடக்கிய ஒரு முன்னோடி பராமரிப்புத் தொகுதி பாடத் திட்டத்தை மாநில அரசாங்கம் உருவாக்கி வருகிறது.

இந்த முயற்சி ஒரு முழுமையான அணுகு முறையைக் கொண்டுள்ளது என்றும், பராமரிப்பு என்பது உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், மன மற்றும் உணர்ச்சி சமநிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்வதாகவும் மாநில மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நல ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.

மேலும், இந்தப் பராமரிப்புத் தொகுதி டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும், இது பொதுமக்கள் பரவலாக அணுகுவதற்கும், தகவல்களை நெகிழ்வான முறையில் வழங்குவதை எளிதாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்."இந்தப் பாடத்திட்டத்தின் உருவாக்கம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

முழுமையாகச் செயல்படுத்தப் படுவதற்கு முன்பு இது பல கட்ட மேம் பாடுகளைக் காணும்.""சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் பராமரிப்புத் தொகுதி தயாராகிவிடும் என மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது," என்று அவர் கூறினார்.

நேற்று இங்குள்ள டேவான் ஜூப்ளி  பேராக்கில் நடைபெற்ற 'டவுன்ஹால் எக்ஸ் ராயா வனிதா சிலாங்கூர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தத் தொகுதி மேம்பாட்டில் வனிதா பெர்டாயா சிலாங்கூர் மற்றும் சிலாங்கூர் பல்கலைக்கழகம் (UNISEL) ஆகியவற்றுடன் இணைந்து செயல் படுவதாகவும், பராமரிப்பு தொடர்பான சிறப்புப் படிப்புகளை உருவாக்கும் முயற்சிகளும் இதில் அடங்கும் என்றும் அன்ஃபால் மேலும் கூறினார்.

https://mediaselangor.com/ms/2026/04/350053ஈப்போ: கிள்ளான், சிலாங்கூரில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு மனதை உருக்கும் சாலை விபத்தில் தந்தையை இழந்த இரண்டு சிறுவர்களை மஜ்லிஸ் அமானா ரக்யாட் (மாரா), தனது யாயாசான் பெலாஜாரான் மாரா (YPM) கீழ் கல்விப் பாதுகாவலராக ஏற்றுக் கொண்டுள்ளது.மரணமடைந்த 33 வயதான அமிருல் ஹபீஸ் ஓமாரின் பிள்ளைகளான 9 வயது முஹம்மது ஆக்கிஃப் அம்ஸ்யார் மற்றும் 7 வயது முஹம்மது ஆஃபிஃப் இஸ் ரய்க்கால் ஆகியோரே அந்த இரு சிறுவர்கள் என மாரா தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வாஜ்டி டுசுக்கி தெரிவித்தார்.இந்த முயற்சி, ஒரு தற்காலிக உதவி என்பதைத் தாண்டி, அச் சிறுவர்களின் கல்வி தொடர்ந்து பாதுகாக்கப் படுவதை உறுதி செய்வதற்கான ஒரு நீண்ட கால அர்ப்பணிப்பாகும் என்று அவர் கூறினார். இது மாராவின் சமூகப் பொறுப்பு மற்றும் அக்கறையைப் பிரதிபலிக்கிறது."தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது ஒருவருக்கு மாதந்தோறும் RM120 உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும்போது அது RM150 ஆக உயர்த்தப்படும். அவர்கள் தங்கள் பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்," என்று அவர் கூறினார்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து உதவி வழங்கிய லாருட் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோ முகமது தாவூத் முகமது யூசோஃப் மற்றும் YPM தலைமைச் செயல்முறை அதிகாரி ஃபைசலுடின் முகமது யூசுஃப் ஆகியோருக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.முஹம்மது ஆக்கிஃப் அம்ஸ்யார் மற்றும் முஹம்மது ஆஃபிஃப் இஸ் ரய்க்கால் ஆகிய இருவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும், விடாமுயற்சியுடன் கல்வி கற்க வேண்டும் என்றும் அஷ்ரஃப் வாஜ்டி ஊக்கமளித்தார்."இன்ஷாஅல்லாஹ், ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க மாரா எப்போதும் உங்களுடன் இருக்கும். எல்லாம் வல்ல இறைவன் அமரரின் ஆன்மா சாந்தியடைய அருள் புரிவாராக. அல்-ஃபாத்திஹா," என்றார் அவர்.அதே வேளையில், இந்தச் சோகம் ஒரு தந்தையின் உயிரைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், முழு குடும்பத்திற்கும் கடும் துயரத்தை  ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.மரணமடைந்த அமிருல் ஹபீஸின் மனைவி, 32 வயதான நோர் நடியா அப்துல் மஜித், கணவரின் இறுதிச் சடங்குகளைக் கவனிக்க வெளியே சென்றிருந்தபோது, அமரரின் தாயார், 56 வயதான ஃபரிடா அஹ்மத்துடன் காணொளி அழைப்பு மூலம் பேசியதாக அஷ்ரஃப் வாஜ்டி கூறினார்."கண்ணீருடன் பேசிய அவர், தனது மகன் ஒரு நல்ல பிள்ளை என்றும், குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க எப்போதும் முயற்சி செய்தான் என்றும் பகிர்ந்து கொண்டார். இந்த இழப்பு ஒரு தனிநபரின் இழப்பு மட்டுமல்ல, இன்னும் சிறுவர்களாக இருக்கும் பிள்ளைகளின் ஆதரவை இழந்ததுமாகும்," என்று அவர் மேலும் கூறினார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், ஜாலான் ராயா பாராட் பகுதியில் குடிபோதையிலும், போதைப்பொருள் உட்கொண்டும் வாகனம் ஓட்டி மோட்டார் சைக்கிளோட்டியின் மரணத்திற்கு காரணமானதாக நம்பப்படும் ஆடவர் நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.#MARA #YPM #AnakAngkatMARA #AmirulHafiz #PendidikanTerjamin #KomunitiPrihatin #MalaysiaMadanioriginal news : https://mediaselangor.com/ms/2026/04/350109

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.