ஷா ஆலம், மார்ச் 31: அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினச் சிக்கல்களுக்கு மத்தியிலும், நாட்டின் உணவுப் பொருட்களின் கையிருப்பு போதுமானதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசு மற்றும் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் (பிகேபிஎஸ்) மேற்கொள்ளப்படும் நெருங்கிய ஒத்துழைப்பின் மூலம் இந்த முயற்சி செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார். இதன் வழி, அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் சீராகவும், தரமாகவும், நியாயமான விலையிலும் இருப்பது உறுதி செய்யப்படும்.
"விற்பனைக்கு வரும் பொருள்கள் போதுமானதாகவும், தரமானதாகவும், நியாயமான விலையில் மக்களைச் சென்றடைவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்," என்று நேற்று விஸ்மா பிகேபிஎஸ்-இல் உள்ள எஹ்சான் மார்ட்டின் செயல்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
நுகர்வோரைப் பாதிக்கக்கூடிய இடையூறுகளைத் தவிர்க்க, உணவு விநியோகச் சங்கிலி எப்போதும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வருகையின் போது, உணவுப் பொருட்களின் விலை உயர்வு சவால்களை எதிர்கொள்வதில் பிகேபிஎஸ்-இன் தயார்நிலையையும் முகமது சாபு ஆய்வு செய்தார். அதே வேளையில், பொதுமக்கள் நிதானமாகச் செலவு செய்யுமாறும், பீதி கொள்முதல் செய்வதைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
"தேவைக்கேற்ப வாங்குங்கள். அனைவருக்கும் உணவுப் பொருட்கள் போதுமானதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்," என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் பிகேபிஎஸ் குழுமத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ வீரா டாக்டர் முகமது கைரில் அவர்களும் உடனிருந்தார்.
உணவுப் பொருட்களின் கையிருப்பு போதுமானது, வாழ்க்கைச் செலவினச் சுமையைச் சமாளிக்க அரசாங்கம் உறுதி
31 மார்ச் 2026, 9:40 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
உலகளாவிய விலை உயர்வு - மலேசிய இந்திய உணவகங்களைப் பாதிக்கும்
Shalini Rajamogun
27 மார்ச் 2026

national
உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டின் உணவுப் பாதுகாப்பு உறுதி - அமைச்சர் முகமட் சாபு
Shalini Rajamogun
25 மார்ச் 2026

selangor
சுகாதார விதிமீறல் - இரண்டு உணவகங்களுக்கு அபராதம்
Shalini Rajamogun
25 மார்ச் 2026

selangor
சிலாங்கூர் மாநிலத்தின் உணவு இருப்பு 6 மாதங்களுக்கு உயர்த்தப்படும் – மந்திரி புசார் அறிவிப்பு
Shalini Rajamogun
20 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




