ஷா ஆலாம், மார்ச் 27: மாநிலத்தின் சுற்றுலாத் துறையின் வேகத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, சிலாங்கூர் சீனா, ஜப்பான், தைவான் மற்றும் பிற ஆசியான் நாடுகள் உள்ளிட்ட ஆசிய சந்தைகளில் கவனம் செலுத்துகிறது.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் காரணமாக, குறிப்பாக அப் பிராந்தியம் மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் அனைத்துலக சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதால் இந்த உத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் (EXCO) டத்தோ இங் சூ லிம் கூறுகையில், ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட மத்திய கிழக்கு பதட்டங்கள் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள சூழல் ஆகியவை உலகளாவிய சுற்றுலாப் பயணிகளின் இயக்கத்தைப் பாதிக்கும் முக்கிய காரணிகளாகும் என்றார்.
"நிகழும் மோதல்கள், குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை நிச்சயமாகப் பாதிக்கும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
இருப்பினும், சுற்றுலாத் துறையில் ஏற்படும் தாக்கங்கள் உட்பட அனைத்து அம்சங்களையும் மாநில அரசு ஆராயும் என்று அவர் விளக்கினார்.
மாநிலத்தின் சுற்றுலாத் துறை தொடர்ந்து வளர்ச்சியடைவதை உறுதி செய்வதற்காக, விளம்பர உத்திகள் அவ்வப்போது சரிசெய்யப் படும் என்று அவர் கூறினார்.அதே நேரத்தில், 2026 சிலாங்கூர் வருகை ஆண்டு மற்றும் மலேசிய வருகை ஆண்டு முயற்சிகள் மூலம் சிலாங்கூர் தனது சுற்றுலாப் பிரச்சாரத்தை வலுப்படுத்தும்.
"வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்படும் சரிவை சமன்செய்ய, ஆசிய சந்தையை நோக்கிய விளம்பரங்களை நாங்கள் தீவிரப் படுத்துவதோடு, மலேசியர்களிடையே உள்நாட்டு சுற்றுலாவையும் ஊக்குவிப்போம்," என்று அவர் கூறினார்.
மேலும், தற்போதைய முன்னேற்றங்களைக் கண்காணித்து, உரிய சரிசெய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சுற்றுலா இலக்குகள் பாதிக்கப்படாமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
"இந்தத் துறை தொடர்ந்து மீள்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்காக, தற்போதைய சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து, சுற்றுலா இலக்குகளை அவ்வப்போது சரிசெய்வோம்.
இப்போதைய சுற்றுலா கருபெருள் ''வெகுதூரம் செல்லத் தேவையில்லை, சிலாங்கூரிலும் எல்லாம் உண்டு," என்பது அதிக உள்ளூர்வாசிகளை கவந்து இழுக்கக் கூடியது என்றார் அவர்.








