பூச்சோங்கில் முதியவர் சாலையோரம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்

10 மார்ச் 2026, 7:59 AM
பூச்சோங்கில் முதியவர் சாலையோரம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்

ஷா ஆலம், மார்ச் 10 – பூச்சோங், தாமான் புத்ரா பெர்டானாவில் உள்ள தாமான் லா காட்டேஜ் அருகே 67 வயதுடைய உள்ளூர் முதியவர் ஒருவர் சாலையோரம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் தனது வாகனத்திற்கு அருகிலேயே அவர் மயங்கிக் கிடப்பதை பொதுமக்கள் கவனித்து காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அந்த முதியவர் பழைய பொருட்களைச் சேகரிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாகச் சிப்பாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் நூர்ஹிஷாம் பஹாமான் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், அவரது மரணத்தில் எவ்வித குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படவில்லை என்றும், இதனால் இந்த வழக்கு 'திடீர் மரணம்' (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்த முதியவரின் உடல் தற்போது செர்டாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மரணத்திற்கான துல்லியமான காரணத்தை அறிய உடற்கூறாய்வு பரிசோதனைகள் நடைபெறவுள்ளன.

அதே வேளையில், இந்தச் சம்பவம் குறித்துச் சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று டத்தோ நூர்ஹிஷாம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்த மரணம் தொடர்பாக ஏதேனும் கூடுதல் தகவல்கள் தெரிந்தால், பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது விசாரணை அதிகாரி சார்ஜன் மேஜர் ரோஸ்லான் ரோசின் என்பவரை 012-3618462 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.