புத்ராஜெயா, மார்ச் 10- அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேலும் பல நற்செய்திகளை விரைவில் வழங்கவுள்ளார்.
இத்தகவலை பிரதமரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஸ்ருல் அபைடா உறுதிப் படுத்தினார்.ஏப்ரல் மாதம் வழங்கப் படவிருந்த STR ரொக்க உதவியின் இரண்டாம் கட்டத்தை முன்கூட்டியே, அதாவது நாளையே வழங்குமாறு பிரதமர் நேற்று காலை உத்தரவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மக்களின் வாழ்வாதாரச் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் மேலும் பல புதிய உதவித் திட்டங்களையும் அறிவிப்புகளையும் ஹரி ராயாவிற்குள் அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஹரி ராயா கொண்டாட்டத்திற்கு முன்பாக, நிதி மற்றும் சமூக ரீதியாக மக்களுக்கு உதவுவதையே இந்த அறிவிப்புகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
மக்களின் நலன் மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் மடாணி அரசாங்கம் எப்போதும் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என்றும் துங்கு நஸ்ருல் குறிப்பிட்டார்.








