கோலாலம்பூர், மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, நாட்டின் எல்லைகள் மற்றும் முக்கிய இடங்களில் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அரச மலேசிய போலீஸ் (PDRM) அனைத்து மாநில போலீஸ் தலைவர்கள் மற்றும் துறை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த பாதுகாப்புப் பணிகளில், நாட்டில் உள்ள அமெரிக்கா (AS) மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நலன்கள், சொத்துக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களும் அடங்கும் என தேசிய போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார். இவையாவும் குறிப்பிட்ட தரப்பினரின் இலக்காக மாறக்கூடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"இந்த நிலவரம் குறித்து ஆராய்வதற்காக, தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் (MKN) நாங்கள் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி வருகிறோம் என்று அவர் புக்கிட் அமானில் இன்று நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இந்தக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பொது ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், தேவையற்ற வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதிலும் PDRM-இன் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்தது. இதற்குப் பதிலடியாக, அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நலன்கள் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.
- பெர்னாமா
மத்திய கிழக்கு பதற்றத்தைத் தொடர்ந்து, போலீஸ் ரோந்துப் பணிகள் மற்றும் பாதுகாப்பு தீவிரம்
7 மார்ச் 2026, 5:21 PM
தொடர்புடைய செய்திகள்
selangor
பந்திங்கில் வழிப்பறி கொள்ளையில் ஒருவர், வாகனம், பணம், உடமைகளையும் இழந்தார்
Pakiya
11 மார்ச் 2026

national
கோல கிராய், மருத்துவமனையின் விடுதி குளியலறையில் 29 வயது பெண் பயிற்சி மருத்துவரின் சடலம்!
Pakiya
8 மார்ச் 2026

national
ஐஎஸ் இயக்கத்தில் தொடர்பு; சந்தேகத்தின் பேரில் பதின்ம வயதினர் மூவர் உட்பட அறுவர் கைது
Mavitthran
7 மார்ச் 2026

selangor
உண்டியல் திருடிய குற்றத்திற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூன்று நபர்களுக்கு, தலா ரிம 4,000 அபராதமும் ஆறு மாத சிறை விதித்தது.
Pakiya
4 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




