பத்து காஜா, பிப். 27 – கடந்த மாதம் பட்டாசுகளைப் பயன்படுத்தி தெருநாய் ஒன்றைக் கொன்ற குற்றத்திற்காக, உணவக உரிமையாளர் ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று RM2,000 அபராதம் விதித்தது.
64 வயதான வோங் ஃபான் சாங், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் அஸ்லின் ஸெட்டி ஜைனல் அபிடின் இந்தத் தீர்ப்பை வழங்கினார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அந்த ஆடவருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
பூசிங், தாமான் பூசிங் பாருவில் உள்ள ஜாலான் செரோஜாவில், ஜனவரி 28 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் வோங் இச்செயலைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
தண்டனைச் சட்டப்பிரிவு 428-இன் கீழ் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இக்குற்றத்திற்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
வோங்கின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் சூங் ஹுய் யேன், தனது கட்சிக்காரர் சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த நாயால் துரத்தப்பட்டு மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்ததாகவும், அதனால் நாயை பயமுறுத்த மட்டுமே அவர் எண்ணியதாகவும் கூறி, குறைந்தபட்ச அபராதமாக RM500 விதிக்குமாறு கோரினார்.
துணை அரசு வழக்கறிஞர் மோனிஷா பாண்டே, விலங்குகள் மீதான கொடுமைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மற்றவர்களுக்கு ஒரு பாடமாகக் கடுமையான தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். பட்டாசுகளை வீசும் செயல் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தெருநாய்கள் குறித்த புகார்களைப் பத்து காஜா மாவட்ட மன்றம் போன்ற ஊராட்சி மன்றங்களிடம் தெரிவிக்க வேண்டுமே தவிர, சட்டத்தைக் கையில் எடுக்கக்கூடாது என்று அவர் கூறினார்.
பட்டாசுகளை வெடிக்க செய்து நாயைக் கொன்ற உணவக உரிமையாளருக்கு RM2,000 அபராதம்
27 பிப்ரவரி 2026, 8:44 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
குழந்தையைக் கொன்றதாகப் பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
Shalini Rajamogun
4 ஜூன் 2026

national
இரண்டு வயது சிறுவன் கொலை வழக்கு: தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
Shalini Rajamogun
29 மே 2026

national
7 மாதக் குழந்தை கொலை வழக்கு: மழலையர் பள்ளி காப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
Shalini Rajamogun
14 மே 2026

national
இளம்பெண் கொலை வழக்கு: இரண்டு இளைஞர்களுக்கு மேலும் 7 நாட்கள் தடுப்பு காவல் நீட்டிப்பு
Shalini Rajamogun
8 மே 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



