கோத்த கினபாலு, பிப். 25 - நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழையைத் தொடர்ந்து, இன்று நண்பகல் நிலவரப்படி சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதிய மாவட்டமாக மெம்பாகுட் உருவெடுத்துள்ளது.
இதற்கிடையில், இன்று காலை சிபித்தாங், சூக் மற்றும் பியூஃபோர்ட் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களைத் தற்காலிக நிவாரண மையங்களுக்கு (PPS) மாற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சபா மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்தது.
மெம்பாகுட், சிபித்தாங் மற்றும் பியூஃபோர்ட் ஆகியவை கோத்த கினபாலுவின் தென்மேற்கில் அமைந்துள்ள சபா மேற்குக் கடற்கரை மாவட்டங்களாகும். அதேவேளையில், சூக் மாநிலத்தின் உள்பகுதியில் உள்ள மாவட்டமாகும்.
இதற்கிடையில், பித்தாஸில் வெள்ள நிலவரத்தில் மாற்றம் இல்லை. இன்று காலை நிலவரப்படி, 861 குடும்பங்களைச் சேர்ந்த 1,695 பேர் இன்னும் ஐந்து தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
-- பெர்னாமா
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதிய மாவட்டம் மெம்பாகுட்
25 பிப்ரவரி 2026, 7:49 AM
தொடர்புடைய செய்திகள்
national
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது
Shalini Rajamogun
1 மார்ச் 2026

national
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் 2,616 ஆக உயர்வு
Evelyn Moses
26 பிப்ரவரி 2026
national
சபாவில் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
Shalini Rajamogun
24 பிப்ரவரி 2026

national
பியூபோர்ட் வெள்ளம்: ஐந்து சாலைகள் மூடல், ரயில் சேவையும் பாதிப்பு
Evelyn Moses
26 பிப்ரவரி 2026
உங்கள் கருத்து என்ன?



