ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்ய தற்காலிக அனுமதியைப் பெற விண்ணப்பிக்கலாம் - எம்பிபிஜே

20 பிப்ரவரி 2026, 12:54 AM
ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்ய தற்காலிக அனுமதியைப் பெற விண்ணப்பிக்கலாம் - எம்பிபிஜே

ஷா ஆலம், பிப் 20: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே), அதன் நிர்வாகப் பகுதியில் உள்ள வர்த்தகர்களுக்கு ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்வதற்கான தற்காலிக அனுமதியைப் பெற விண்ணப்பங்களைத் திறந்துள்ளது.

விண்ணப்பத்திற்கான கடைசி நாள் பிப்ரவரி 26 ஆகும். அனுமதிக்கப்பட்ட விற்பனை காலம் மார்ச் 5 முதல் 27 வரை என எம்பிபிஜே தெரிவித்துள்ளது.

“விண்ணப்பத்தை மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, அனைத்து விண்ணப்பதாரர்களும் மலேசியக் காவல்துறையின் (PDRM) பெட்டாலிங் ஜெயா கிளையிடமிருந்து முன் அனுமதியைப் பெற வேண்டும்.

"PDRM ஒப்புதலைப் பெற்ற பிறகு, வணிகர்கள் https://elesen.mbpj.gov.my என்ற அகப்பக்கத்தில் உள்ள எம்பிபிஜே மின்-உரிம அமைப்பு மூலம் இணையம் வழி விண்ணப்பிக்க வேண்டும்," என முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், பண்டிகைக் காலம் முழுவதும் பொதுப் பாதுகாப்பு மற்றும் சுமூகமான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் விற்பனை காலக்கெடுவுகளைக் கடைப்பிடிக்குமாறு எம்பிபிஜே வணிகர்களுக்கு நினைவூட்டுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை எம்பிபிஜே உரிமம், வணிக மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கு 013-9410146 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது எம்பிபிஜே அலுவலகத்தை நாடலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.