ஷா ஆலம், பிப் 19: டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிமுக்கு பதிலாக ஷா ஆலமின் 13வது மேயராக டத்தோ ஸாபிடா சஃபார் இன்று பொறுப்பேற்றார். அவர் ஷா ஆலமின் மேயராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சகத்தில் கூட்டாட்சி நிலங்கள் மற்றும் சுரங்கங்களின் தலைமை இயக்குநர் (JKPTG) என்ற பதவி உயர்வு பெற்ற முகமட் ஃபௌசிக்குப் பதிலாக ஸாபிடா நியமிக்கப்பட்டதாக ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) அறிவித்தது.
“பொது சேவையில் விரிவான அனுபவம் கொண்ட ஸாபிடாவின் நியமனம் ஒரு முற்போக்கான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த ஊராட்சி மன்றமாக ஷா ஆலம் மாநகராட்சியின் சேவைகளையும் சிறப்பையும் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று முகநூல் தெரிவிக்கப்பட்டது.
புதிய ஷா ஆலம் மேயரின் பதவியேற்பு விழா மற்றும் நியமனம் நாளை விஸ்மா எம்பிஎஸ்ஏவில் உள்ள நகராட்சி மண்டபத்தில் நடைபெறும்.
59 வயதான முகமட் ஃபௌசி, ஒரு வருடம் சுபாங் ஜெயா மேயராகப் பணியாற்றிய பிறகு, ஜூன் 2024-இல் ஷா ஆலம் மேயராக நியமிக்கப்பட்டார்.
தனது பதவிக் காலம் முழுவதும், ஷா ஆலம் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, நகராட்சி சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், தனது ஊழியர்களின் செயல்திறன் மற்றும் வேகத்தை உயர்த்தவும் முகமட் ஃபௌசி மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளார்.


