சிரம்பான், பிப் 9- மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் காலிறுதி சுற்றின் முதற்கட்ட ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் நேற்றிரவு நெகிரி செம்பிலான், துவாங்கு அப்துல் ரஹ்மான் பாரோயில் நடைபெற்ற ஆட்டத்தில் சிலாங்கூர் எஃப் சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் நெகிரி செம்பிலான் அணியை வீழ்த்தியது
சிலாங்கூர் எஃப் சி அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் மொராய்ஸ் பெனால்டி மூலம் 95ஆவது நிமிடத்தில் சிலாங்கூர் அணிக்கான வெற்றிக்கோலை அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் சிலாங்கூர் எஃப் சி அணி ஒரு கோல் முன்னிலையில் உள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இரண்டாம் கட்ட காலிறுதி சுற்றில் சிலாங்கூர் எஃப் சி அணி நெகிரி செம்பிலான் அணியை மீண்டும் சந்திக்கவுள்ளது.
இவ்வாட்டம் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது


