பிளஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து: லாரி ஓட்டுநர் பலி

5 பிப்ரவரி 2026, 2:56 AM
பிளஸ்  நெடுஞ்சாலையில் கோர விபத்து: லாரி ஓட்டுநர் பலி
பிளஸ்  நெடுஞ்சாலையில் கோர விபத்து: லாரி ஓட்டுநர் பலி

ஷா ஆலம், பிப்ரவரி 5 — வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் தெற்கு நோக்கிய திசையில் கிமீ 433-இல் இன்று அதிகாலை விரைவுப் பேருந்து மற்றும் இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் லாரி ஓட்டுநர் என்றும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார். அதே லாரியில் பயணம் செய்த 39 வயதுடைய மாற்று ஓட்டுநருக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்த விபத்தில் சிக்கிய விரைவுப் பேருந்தின் ஓட்டுநர் பேருந்துக்குள் சிக்கிக்கொண்டதுடன், தலை மற்றும் இடது காலில் காயமடைந்தார். மேலும் மூன்று ஆண் பயணிகள் காயமடைந்தனர், ஒரு சிறுமிக்கு மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. மற்றுமொரு டிரெய்லர் லாரியின் ஓட்டுநருக்கும் கழுத்தில் காயம் ஏற்பட்டதாக அவர் விவரித்தார். அதிகாலை 5.12 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, புக்கிட் செந்தோசா மற்றும் ரவாங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 16 பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அகமட் முக்லிஸ் தெரிவித்தார்.

விபத்தின் போது அந்தப் பேருந்தில் 14 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் என 19 பெரியவர்களும், 7 குழந்தைகளும் இருந்தனர். காயமடைந்த அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.