ஷா ஆலம், பிப் 5: பத்து கேவ்ஸ் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 19வது மாடியிலிருந்து 19 வயதுடைய பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தனது துறைக்குத் தகவல் கிடைத்தவுடன், செலாயாங் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்களுடன் காவல்துறை குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் நூர் அரிஃபின் முகமட் நாசீர் கூறினார்.
"மருத்துவப் பணியாளர்களால் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிசெய்யப்பட்டது, ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.
"சம்பவம் நடந்த இடத்தில் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் எந்த குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படவில்லை. தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் தான் மரணத்திற்குக் காரணம் என பிரேதப் பரிசோதனை முடிவு உறுதிப்படுத்தியது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நூர் அரிஃபின் கூறினார். இதற்கிடையில் விசாரணைக்கு இடையூறாக இருக்கும் எந்த ஊகங்களையும் வெளியிட வேண்டாம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
இச்சம்பவம் தொடர்பான எந்தவொரு தகவலையும் புலனாய்வு அதிகாரி, இன்ஸ்பெக்டர் முகமட் ரிட்சுவான் ஆலாங்கை 019-4492685 அல்லது கோம்பாக் ஐபிடி செயல்பாட்டு அறை 03-6126 2222 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


