புதுடெல்லி, ஜன 30 - இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் அந்நாட்டில் வசிக்கும் மலேசியர்கள் நிபா வைரஸ்க்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு புதுடெல்லியில் உள்ள மலேசிய உயர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
நிபா வைரஸ் பாதிப்பு உள்ள பகுதிகளுக்குச் செல்பவர்கள், நெரிசலான பகுதிகளைத் தவிர்க்கவும், பொது இடங்களில் முகக்கவரிகளை அணியுமாறு அறிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடிக்கடி கை கழுவுதல் மற்றும் கழுவப்படாத பழங்கள் அல்லது மாசுபட்ட உணவை சாப்பிடுவதைத் தவிர்ப்பது உள்ளிட்ட தனிப்பட்ட சுகாதாரத்தைப் பராமரிக்கவும் மலேசியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்ந்து முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து, தேவையான புதுப்பிப்புகளை மலேசிய உயர் ஆணையம் வழங்கும். மலேசிய குடிமக்கள் இந்த தொற்று பற்றி தகவல்களை அறிந்து கொள்ளவும், அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நோய்வாய்ப்பட்ட விலங்குகள் அல்லது காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நபர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் மலேசிய உயர் ஆணையம் எச்சரித்தது.
மேற்கு வங்கத்தில் இரண்டு நிபா வழக்குகளை இந்திய சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியதோடு செவ்வாயன்று, தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அது தெரிவித்தது.
இருப்பினும், இதனால், மலேசியா உட்பட பல ஆசிய நாடுகளில், இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு எதிராக பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நிபா வைரஸ் தொற்று என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு ஜூனோடிக் நோயாகும். மேலும் இது அசுத்தமான உணவு மூலமாகவோ அல்லது நேரடியாக மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ மக்களிடையே பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் பொதுவாக மனித உடலில் 4 முதல் 14 நாட்கள் வரை இருக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு அல்லது விலங்குகளுக்கு எந்த சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ கிடையாது.
- பெர்னாமா


