கிளந்தான், ஜன 26: நேற்று மாலை கிளந்தான், கோத்தா பாரு, ஜாலான் தோக் குருவில் அமைந்துள்ள பசிபிக் ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு மாலை 5.58 மணிக்கு அழைப்பு வந்ததாகக் கோத்தா பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) செயல்பாட்டுத் தலைவர், II மூத்த தீயணைப்பு அதிகாரி (PBKII), சத்யுதி சத்தார் தெரிவித்தார்.
“அழைப்பு வந்தவுடன் மொத்தம் 27 பணியாளர்கள் மூன்று இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்,`` என அவர் குறிப்பிட்டார்.
"தீ விபத்து ஏற்பட்ட வீடு கிட்டத்தட்ட முற்றிலுமாக நாசமடைந்ததாக," சத்யுதி சத்தார் கூறினார்.


