புத்ராஜெயா, ஜனவரி 25 — வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) நேற்று இந்தோனேசியாவின் மேற்கு பாண்டுங் ரெஜென்சியில் உள்ள சிசாருவா மாவட்டம், தேசா பாசிர்லாங்கு, கம்போங் பாசிர் குனிங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் எந்த மலேசிய குடிமக்களும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தோனேசிய அதிகாரிகளிடமிருந்து கிடைத்த சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் இந்த உறுதிப்படுத்தல் அளிக்கப்பட்டுள்ளது என்று அது தெரிவித்துள்ளது.“இந்த சம்பவத்தில் எந்த மலேசிய குடிமக்களும் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை என்பதை அமைச்சகம் உறுதிப்படுத்த விரும்புகிறது.
“ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகம் மேற்கு பாண்டுங்கில் உள்ள மாணவர் பிரதிநிதிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மலேசியர்களை தொடர்பு கொண்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த சமீபத்திய தகவல்களைப் பெற இந்தோனேசியா குடியரசின் வெளியுறவு அமைச்சகத்துடன் தீவிர தொடர்பில் உள்ளது,” என்று விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட ஊடக ஆலோசனையில் தெரிவித்துள்ளது.
இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும், தொடர்ந்து நடைபெற்று வரும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.
இந்த வளர்ச்சிகளை தொடர்ந்து கண்காணித்து, தேவையான புதுப்பிப்புகளை வழங்குவதாக விஸ்மா புத்ரா மேலும் தெரிவித்துள்ளது.தூதரக உதவி தேவைப்படும் மலேசிய குடிமக்கள் ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகத்தை +62 813 8081 3036 என்ற தொலைபேசி எண் வழியாகவோ அல்லது mwjakarta@kln.gov.my
என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.


