பந்திங், ஜன 23 - 2026 மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டத்திற்கான விண்ணப்பத்தைப் கின்ராரா தொகுதியின் சமூக சேவை மையம் திறந்துள்ளது.
புதிய பள்ளி அமர்விற்கு மாணவர்களும் பெற்றொர்களும் தயாராக உதவும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டத்திற்கான பதிவு ஜனவரி 22 தொடங்கி, பிப்ரவரி 6ஆம் திகதி அல்லது நிர்ணயிக்கப்பட்ட இடங்கள் முழுவதும் பூர்த்தி ஆகும் வரை நடைபெறும் என முகநூலில் அறிவிக்கப்பட்டது. அனைவரும் முன்பே பதிவு செய்து, தங்கள் இடத்தை உறுதிசெய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பத்தாரர்கள் 5,000க்கும் குறைவான குடும்ப வருமானம் மற்றும் கின்ராரா தொகுதியின் வாக்காளராக இருத்தல் வேண்டும்.
இந்த திட்டத்திற்கான விண்ணப் படிவங்களைத் தொகுதியின் சமூக சேவை மையத்தில் பெற்று கொள்ளலாம்.


