ஷா ஆலம், ஜன 9 - இன்று மாலை 7 மணி வரை சிலாங்கூரில் உள்ள 4 மாட்டங்களில் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவை உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங் ஜெயா மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் ஆகும்.
இதே வானிலைதான் கோலாலம்பூர், புத்ராஜெயா, பேராக், சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களில் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை கூறியது.
பொதுமக்கள் வானிலை மாற்றத்திற்கு ஏற்ப எச்சரிக்கையுடன் இருக்கவும், வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு http://www.met.gov.my, சமூக ஊடக வலைத் தளத்தை நாடலாம்.


